Thursday, April 02, 2009

536. சுகுணா திவாகருக்கு ஒரு இலவச விளம்பரம்!

சமீபத்தில் சுகுணா திவாகர் எழுதிய இடுகையின் சுட்டியை டோண்டு ராகவன் எனது இந்தப் பதிவில் பின்னூட்டத்தில் இட்டுச் சென்றிருந்தார். அதை வாசித்தபோது தான் தெரிந்தது, சுகுணா திவாகர் எனக்கு "திடீர் ஈழ ஆதரவாளர்" பட்டம் வழங்கியிருப்பது! சுகுணா போன்ற ஜனநாயகவாதிகளுக்கு விளக்கம் அளிப்பது என் கடமையாகிறது :)

சுகுணா திவாகர் எழுதியது:

ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் ஜனநாயகச்சக்திகளின் மீது அவதூறுகளைப் பரப்பும் கும்பல்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவசியம். அருந்ததிராய் ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்கிற ரேஞ்சில் என்றென்றும் அன்புடன் பாலா எழுதுவது அதற்கு ஒரு உதாரணம். அருந்ததிராய் முன்வைத்துப் போராடிய எத்தனை மக்கள் பிரச்சினைகளை பாலா ஆதரித்திருக்கிறார்? சனாதனப் பார்வையையே தன் எழுத்துக்களின் அடிப்படையாய்க் கொன்டுள்ள பாலா போன்றவர்கள், அருந்ததிராய் பப்ளிசிட்டிக்காக மட்டுமே பேசுவார் என்று அருந்ததிராயின் வகிபாத்திரத்தை ஊத்தி மூடப்பார்ப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இதேபோலவே புலிகளின் மீதான விமர்சனத்தோடேயே ஈழமக்களின் பிரச்சினைகளைப் பேசும் சுகன், ஷோபாசக்தி, .மார்க்ஸ், ரயாகரன் என மாற்றுக்குரலை முன்வைக்கும் அனைவரையும் ரா ஆட்கள், கருணா ஆதரவாளர்கள், இலங்கை அரசை மறைமுகமாக ஆதரிப்பவர்கள் என்றெல்லாம் அவதூறு பரப்புவது, அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களின் நியாயங்களைக் கூட பரிசீலிக்க மூர்க்கமாய் மறுப்பது ஆகியவை இன்று இணையத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் ஈழப்பிரச்சினையை அரசியல் ஆதாயமாக மாற்றி அதற்குத் துரோகம் செய்துள்ள நெடுமாறன் உள்ளிட்ட கருங்காலிகளை விமர்சிப்பதை விட மேற்கண்ட ஜனநாயகச் சக்திகளைக் காய்வதே அதிகமாய் நடக்கிறது. துரோகி பட்டம்தான் நமக்கு வாரி வழங்குவதற்கு ஏகப்பட்ட கையிருப்பு உள்ளதே! உலகமயமாக்கல், இந்துத்துவ வன்முறைகள், தலித்துகளின் மீதான வன்கொடுமைகள், சமீபகாலமாய் பெண்களின் மீது அதிகரித்து வரும் கலாச்சாரப் பாசிஸ்ட்களின் தாக்குதல்கள் ஆகியவற்றிற்கெதிராகத் தொடர்ச்சியாகப் போராடி வருபவர்களே ஈழப்பிரச்சினை குறித்தும் விமர்சனபூர்வமான போராட்டங்களில் பற்றி உறுதியாய் நிற்கின்றனர். வைகோ மாதிரியான அரசியல் வியாபாரிகளும் திடீர் ஈழ ஆதரவாளர்களும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஈழமக்களைக் கைகழுவி விடும் நிலை கொண்டவர்களே என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

..பாலா கருத்து:

//அருந்ததிராய் ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்கிற ரேஞ்சில் என்றென்றும் அன்புடன் பாலா எழுதுவது
//
இவ்வளவு நாட்கள் வாயை மூடிக் கொண்டிருந்து விட்டு, இப்போது ஏதோ கட்டாயத்தால் ஈழத்தமிழர் ஆதரவாக களத்தில் குதித்துள்ள அருந்ததியை விமர்சிக்க (எப்படி சுகுணா திவாகருக்கு அருந்ததி சார்பாக ஜால்ரா அடிக்க உரிமை இருக்கிறதோ!) எனக்கும் பூரண உரிமை இருக்கிறதாகவே நினைக்கிறேன்.

மேலும், அருந்ததி ராயை ஸ்ரீலங்கா சென்று போராடவா சொல்கிறேன்!!! இத்தனை நாட்கள் வாயை மூடிக் கொண்டு இருந்து விட்டு இப்போது கூவ வேண்டிய அவசியம் என்ன என்று கேட்பதில் என்ன தவறு ? அதுவும், ரோசா வசந்த் தனது கமெண்ட்டில் "I heard (though I am not sure) when the Tamil literary writers approached Arundhati to make a statement on Srilankan issue, she refused saying `please don't disturb'." -- இப்படி சொல்லியிருந்ததும், நான் கேள்வி கேட்டதற்கு ஒரு காரணம்!

//அருந்ததிராய் முன்வைத்துப் போராடிய எத்தனை மக்கள் பிரச்சினைகளை பாலா ஆதரித்திருக்கிறார்?
//
நான் எதைப் பற்றி எப்போது பேச வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கிறேன். தொழில், குடும்பம் என்ற காரணங்களும் இருக்கிறது. அது சரி, சுகுணா அனைத்துப் பிரச்சினைகளிலும் தன் தரப்பு பற்றி எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா ? சமீபத்தில் எக்மோரில் ஒரு அபார்ட்மெண்ட் குடியிருப்பில், பெண்கள் மீது நிகழ்ந்த வன்முறையை கண்டித்து நான் எழுதியிருந்தேன். சுகுணா ஏன் அது பற்றி எழுதவில்லை என்று முட்டாள்தனமாக கேட்க முடியுமா? பலவற்றை வாசிக்கிறோம், பார்க்கிறோம், முடிந்தபோது எழுதுகிறோம், அஷ்டே.

//சனாதனப் பார்வையையே தன் எழுத்துக்களின் அடிப்படையாய்க் கொன்டுள்ள பாலா போன்றவர்கள்
//
அது என்ன எழவு சனாதனப் பார்வை என்று விளக்கினால் தன்யனாவேன். கிருமி லேயருக்கு எதிராக எழுதியதை சனாதனப் பார்வை என்று சொன்னால், பேச எதுவுமில்லை. எனக்குத் தெரிந்த சனாதன தர்மம்
"பிரக்ஞானம் பிரம்மா , அஹம் பிரம்மாஸ்மி , தத்வம் அஸி , அயம் ஆத்மா" !!!

//வைகோ மாதிரியான அரசியல் வியாபாரிகளும் திடீர் ஈழ ஆதரவாளர்களும்
//
ஈழத்தமிழர் அவலம் பற்றி பேசும்போது கூட எப்படி அரசியல் பல்லிளிக்கிறது பாருங்கள்! வைகோ அரசியல் வியாபாரியாம், ஆனால் சுகுணாவுக்குப் பிடித்த அரசியல்வாதியை / கட்சியை விமர்சித்து ஒரு வார்த்தை கிடையாது, கொடுமைடா சாமி :(

//அருந்ததிராயின் வகிபாத்திரத்தை ஊத்தி மூடப்பார்ப்பதில் "நாம்" கவனமாக இருக்க வேண்டும்.
ஈழமக்களைக் கைகழுவி விடும் நிலை கொண்டவர்களே என்பதையும் "நாம்" புரிந்துகொள்ள வேண்டும்.
//
"நாம்" என்று சொல்லும் தொனியில் உள்ள கர்வத்தை கவனிக்கவும்! அதாவது "ஈழமக்களுக்கு ஆதரவு அளிப்பதில் "நாம்" தனித்துவமானவர்கள். தனது ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து எந்த நேரமும் மிக எளிதில் பல்டி அடித்து விடக்கூடிய ..பாலா போன்ற "திடீர்" ஆதரவாளர்களிடம் "நம்மை"ப் போன்ற "அக்மார்க்" ஆதரவாளர்கள் மிக உஷாராக இருக்க வேண்டும்!" என்பதை எவ்வளவு நேர்த்தியா எடுத்துச் சொல்கிறார், பாருங்கள்!

பெரியார் பாசறையிலிருந்து வந்ததாலும், கம்யூனிச சித்தாந்தத்தில் ஊறியதாலும், தனக்கும் (தன் நண்பர்களுக்கும்!!) மட்டுமே நலிந்தோரைப் (ஈழத்தில் அல்லலுறும் தமிழர் என்று வாசிக்கவும்!) பற்றிப் பேச தகுதியும் அருகதையும் இருப்பதாக ஒருவர் எண்ணினால் அவரைப் பார்த்து பரிதாபப்படுவதை விடுத்து வேறென்ன செய்ய ? இப்படிப்பட்ட அங்கீகாரம் (யார் இதை வழங்குகிறார்கள்? வழங்குபவரின் தகுதிகள் யாவை?) கிடைத்து விட்டதாக சுகுணா எப்படி எண்ணுகிறார்? இன்னொருவரின் ஈழத்தமிழர் ஆதரவை கொச்சைப்படுத்தி, தனக்கு அங்கீகாரம் தேடும் அவலம் குறித்து என்னத்தைச் சொல்ல ?

மேலும் சில பாயிண்டுகள்:

"This is to certify that anbudan BALA is a bonafide supporter of Ealam Tamils" என்று சுகுணா திவாகர் கையெழுத்திட்ட நற்சான்றிதழ் இருந்தால் மட்டுமே, நான் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து எழுதும் தகுதி பெறுகிறேனா ? இல்லையெனில் நான் போலியா ? .கொ..சு :-(

ஈழத்தமிழர் பால் எனது அக்கறை உண்மையா/போலியா என்பதை, இணையத்தில் நான் எழுதியுள்ளதை வைத்து, வாசிப்பவர்கள் தீர்மானிக்கட்டும். ஒரு பிரச்சினையுமில்லை! இது போல தன்னிலை விளக்கம் தருவது சற்று கேவலமாக இருந்தாலும், இதன் மூலன் சுகுணா திவாகருக்கு ஏதாவது புரியும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும், சுகுணாவைத் தவிர, என் வலைப்பதிவை வாசிக்கும் இன்னும் சிலருக்காக (கவனிக்கவும், "பலர்" என்று கூறவில்லை!) இந்த விளக்கத்தை எழுத வேண்டியுள்ளது!

சென்னையில் நடந்த அமைதிப் பேரணி

எ.அ.பாலா

10 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test !

மாயவரத்தான் said...

இன்னுமா மேற்படி கோஷ்டிகளை ஊரு ஒலகம் நம்பிட்டிருக்கு?

லூஸில விடுங்க சார்.

ஒரு பதிவும், பல விநாடிகளும் வேஸ்ட் உங்களுக்கு.

ராஜ நடராஜன் said...

உங்கள் இருவருக்குமே எனது பதிவான "அருந்ததிராயின் பார்வையில் இலங்கை" யில் இலவச விளம்பரம் தந்திருந்தேனே!இருவருமே விளம்பரத்தைப் பார்க்கவில்லையென நினைக்கிறேன்:)

ஜோ/Joe said...
This comment has been removed by the author.
said...

Sir Why are you considering Mr. Suguna Diwakar and all? He is a mere waste party. Have you ever read his articles in Keetru........

He has not even read anything about writer Sujatha's writings but he is writing (Vomitting) about Sujatha's Death " Appadi Enna Sujatha Sathithu Vittar? " I could not understand that how come I one can write about one writer without reading his writings. He himself has said that he had not read anything written by Mr. Sujatha.

I suspect whether Mr. Suguna Diwakar has any conscience. He is selling his writings (Vomitings) thats all. If his blog is not working he says it is because of Parpana Chathi...... I dont know whether to laugh or cry.......he himself has decided his path towards mental hospital.....

that much only I can say.......dont give way to such fellows getting pouplarized......

மாயவரத்தான் said...
This comment has been removed by a blog administrator.
ben said...

one should appreciate the fact she was humane enough to speak on this issue. how many of the guys who talk about eelam and humanity know anything about the impacts of the narmada issue and various other issues that have affected ST's across central and northern india or the issues in Iraq, Palestine, Congo or Darfur. everyone have their own limitation and we should not trivialize the efforts of Arundhati Roy who is truly committed to a large extent unlike vaiko,ramadoss or even nedumaran. We are becoming mad like the sinhalese where hatred is killing the humanity within us, which should at all cost be kept alive if we were to say our cause is just.

enRenRum-anbudan.BALA said...

மாயவரத்தான்,
வாங்க.

//லூஸில விடுங்க சார்.

ஒரு பதிவும், பல விநாடிகளும் வேஸ்ட் உங்களுக்கு.
//
நீங்க சொல்றதும் சரி தான் ! இருந்தாலும், சில நேரங்களில் பதில் சொல்ல வேண்டியிருக்கு...

ராஜநடராஜன்,
உங்கள் பதிவை வாசித்தேன். நன்றி :)

மாயவரத்தான்,
ஜோ நேர்மையாகச் சொன்னதை பரிகாசம் செய்வது தவறு என்பது என் எண்ணம்.

அவர் தன் பின்னூட்டத்தை எடுத்து விட்டார், அதனால், அதற்கான உங்கள் ரெஸபான்ஸையும் எடுத்து விடுவது தான் சரியாக இருக்கும்.

அனானி, பென்,

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

enRenRum-anbudan.BALA said...

//he issues in Iraq, Palestine, Congo or Darfur.
//

Right, there are issues world over. We cannot worry about everything. But people like Arundhathi Roy MUST raise the voice for the genocide happening at our doorstep (Srilanka) at the appropriate time. That is the expectation!

வஜ்ரா said...

http://www.srilankaguardian.org/2009/04/catholic-church-ally-of-tamil-tiger.html

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails